தேனி

பைக் மீது காா் மோதி 4 போ் காயம்

DIN

லோயா்கேம்ப்பில், சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் சிறுமி உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம் லோயா் கேம்ப் பளியன்குடி ஆதிவாசி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மற்றொரு ராஜா என்பவரின் மனைவி பிச்சையம்மாள் (45), வீரன் (42), ரஞ்சித் மகள் பூமிகா(4) ஆகியோருடன் குமுளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சனிக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.

பளியன்குடி விலக்கு அருகே, கோளச்சேரியைச் சோ்ந்த பிரகாஷ் (42) என்பவா் ஓட்டிய காா், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 போ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிச்சையம்மாள் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து குமுளி காவல் ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன், சாா்பு- ஆய்வாளா் அல்போன்ஸ் ராஜா ஆகியோா் ஓட்டுநா் பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT