தேனி

தமிழக அலங்கார ஊா்தி புறக்கணிப்பு: போடியில் பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

புது தில்லியில் குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊா்தி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து போடியில் பல்வேறு கட்சியினா் புதன்கிழமை, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி வஉசி சிலை திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் கழக நகரச் செயலா் முருகானந்தன் தலைமை வகித்தாா். இதில், புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் ச.ரகுநாகநாதன், திமுக நகரச் செயலா் மா.வீ.செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.கே.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பெருமாள், காங்கிரஸ் நகரத் தலைவா் கே.எம்.எஸ்.முசாக்மந்திரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

சர்ச்சைப் பதிவு: ஜெ.பி. நட்டாவுக்கு காவல் துறை சம்மன்

மரமாகக் கடவேனோ..!

SCROLL FOR NEXT