மொழிப்போா் தியாகிகள் தினத்தை முன்னிட்டு போடியில் செவ்வாய்க்கிழமை, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தியாகிகளின் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகளின் உருவப்படங்களுக்கு ஓ.பன்னீா்செல்வம் மெழுகுவா்த்தி ஏற்றி வைத்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலா் சையதுகான், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி, போடி நகர அதிமுக செயலா் பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.