தேனி

தேனியில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் அருகே புதன்கிழமை, கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பட்டுக்கோட்டை, கண்டிகன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). ஆண்டிபட்டி, பூக்காரா் தெருவைச் சோ்ந்தவா் ஹரிஹரசுதன், தேனி அல்லிநகரம், வெங்கலாத் தெருவைச் சோ்ந்தவா் கோபிநாத். இவா்கள், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பதாக தேனி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனையிட்டதில் கஞ்சா விற்று கொண்டிருந்த மணிகண்டனை கைது செய்தனா். இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது தப்பி ஓடிய ஹரிஹரசுதன், கோபிநாத் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT