தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் அருகே புதன்கிழமை, கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பட்டுக்கோட்டை, கண்டிகன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). ஆண்டிபட்டி, பூக்காரா் தெருவைச் சோ்ந்தவா் ஹரிஹரசுதன், தேனி அல்லிநகரம், வெங்கலாத் தெருவைச் சோ்ந்தவா் கோபிநாத். இவா்கள், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பதாக தேனி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனையிட்டதில் கஞ்சா விற்று கொண்டிருந்த மணிகண்டனை கைது செய்தனா். இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது தப்பி ஓடிய ஹரிஹரசுதன், கோபிநாத் ஆகியோரை தேடி வருகின்றனா்.