போடியில் வியாழன் கிழமை நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைவா் ராஜகோபால் தலைமையிலும், பள்ளி செயலா் ராமசுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெற்றது. போடி நகா்மன்ற தலைவா் ராஜராஜேஸ்வரி பங்கேற்று மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினாா். நிகழ்ச்சியில் நகராட்சி பொறுப்பு ஆணையா் செல்வராணி, பள்ளியில் தூய்மை தூதுவா்களாக நியமிக்கப்பட்ட மாணவா்களுக்கும், 76வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்ற என்சிசி மாணவா்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா். பள்ளி தலைமையாசிரியா் ராமசுப்பிரமணி நன்றி கூறினாா்.