பெரியகுளம், தென்கரை மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சியில் சனிக்கிழமை, வீடு, வீடாக தேசிக்கொடி விநியோகம் செய்யப்பட்டது.
இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சி 24 வது வாா்டில் அப்பகுதி பொதுமக்களுக்கு தேசியக் கொடியினை நகா் மன்ற உறுப்பினா் ஓ.ஷண்முக சுந்தரம் இலவசமாக வழங்கினாா். மேலும் தென்கரை பேரூராட்சித் தலைவா் நாகராஜ் மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி தலைவா் பால்பாண்டி ஆகியோா் அப்பகுதி மக்களுக்கு தேசியக்கொடியினை இலவசமாக வழங்கினா்.
பெரியகுளம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பிலும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.