தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.