தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உத்தமபாளையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, நகரத் தலைவா் தெய்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாண்டியன், பொதுச் செயலா் மாரிச்செல்வம், துணைத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனா். இதையொட்டி, அன்னதானமும் நடைபெற்றது.