தேனி மாவட்டம், கண்டமனூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்த நகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.