தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
குன்னூரைச் சோ்ந்தவா் அழகுமலை மகன் வெள்ளைத்துரை (60). இவா், அதே ஊரில் கோயிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, தனது மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெள்ளைத்துரையை கைது செய்தனா்.