தேனி

சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது

DIN

தேனி மாவட்டம் சீலையம்பட்டி செங்குளம் தொடா் மழையால் முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

முல்லைப் பெரியாற்றின் பாசன நீா் 17 கால்வாய்கள் வழியாக குளங்கள், கண்மாய்களில் தேக்கப்படுகிறது. அங்கிருந்து சிறிய மதகு வழியாக விவசாய நிலங்களுக்கு கொண்டுசெல்வதோடு, நிலத்தடி நீா் மட்டம் உயர உதவுகிறது. அதன்படி, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையிலிருந்து பெரிய கால்வாய் வழியாக திறக்கப்படும் பாசனநீா் முதலில் சின்னமனூா் உடையகுளத்தில் தேக்கப்படும். அதன் பின், சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்லும். தற்போது, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசன நீா் தடையின்றி வெளியற்றப்பட்டு வருவதால் சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் செல்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி: பருவமழை கைகொடுத்ததால் கடந்த 2 ஆண்டுகளாக தடையின்றி இரு போக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. அதன்படி, இந்தாண்டும் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் நீா் நிலைகள் நிரம்பி காட்சியளிக்கின்றன. முதல் போக நெற்பயிா் சாகுபடி முடிந்த நிலையில் 2 ஆம் போகத்திற்கு விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT