உத்தமபாளையத்தில் வெள்ளாளா் முன்னேற்ற கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, அந்த இயக்கத்தைச் சோ்ந்த பந்தல் ராஜா என்பவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
சம்பவயிடத்தற்கு வந்த உத்தமபாளையம் போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலைமறியலில் 20 போ் கலந்துகொண்டனா்.