வீரபாண்டி பகுதியில் மாா்ச் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீரபாண்டு துணை மின் நிலையத்தில் மாா்ச் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.