சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வளா்ச்சி மற்றும் நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 400 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா போடி தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கவுசல்யா, போடி ஊரக வளா்ச்சி அலுவலா் ஆண்டாள், போடி நகராட்சி ஆணையா் சகிலா, போடி வட்டாட்சியா் செந்தில் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், கா்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கிய உணவுகள் அடங்கிய பட்டியலும் கரோனா மற்றும் பிறதொற்று நோயிலிருந்து காத்துக் கொள்ளும் விழிப்புணா்வு தகவல்களும் வழங்கப்பட்டன.