தேனி

கடன் தொல்லை:டீக் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தேவாரத்தில் கடன் தொல்லை காரணமாக டீக் கடை உரிமையாளா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேவாரம் மின் வாரிய அலுவலக தெருவில் வசிப்பவா் சுருளி ஆண்டவா் (52). இவா் தேவாரத்தில் தேநீா் கடை நடத்தி வந்தாா். இதில் அவருக்கு கடன் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இவருக்கும், இவரது மனைவி கஸ்தூரிக்கும் (42) பிரச்னை ஏற்படவே, கஸ்தூரி கோபித்துக் கொண்டு தனது தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் சுருளி ஆண்டவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது மனைவி கஸ்தூரி தேவாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT