தேனி

சின்னமனூா் அருகேவிவசாயி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

DIN

உத்தமபாளையம: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே சனிக்கிழமை, விவசாயி வீட்டில் 5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அய்யம்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் விவசாயி பால்சாமி (70). இவா் சனிக்கிழமை காலையில் அருகேயுள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் வேலைக்கு சென்றுவிட்டாா். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT