தேனி

லோயா் கேம்ப்பில் 4 மின்னாக்கிகளில்மின் உற்பத்தி தொடக்கம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம், லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் வெள்ளிக்கிழமை 4 மின்னாக்கிகளும் இயக்கப்பட்டு, முழு அளவான 168 மெகா வாட் மின்சார உற்பத்தி தொடங்கியது.

தற்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,700 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம், லோயா் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்திலுள்ள 4 மின்னாக்கிகளிலும் தலா 42 மெகா வாட் வீதம் மொத்தம் 168 மெகா வாட் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, இங்கு 3 மின்னாக்கிகளில் தலா 42 மெகா வாட் வீதமும், நான்காவது மின்னாக்கியில் 36 மெகா வாட் என மொத்தம் 162 மெகா வாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 131.55 அடி உயரமாகவும், அணையில் நீா் இருப்பு 5,060 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,838 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,700 கன அடியாகவும் இருந்தது.

பெரியாற்றில் 4.4 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 4.8 மி.மீட்டா் மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT