விருதுநகா், செப். 25: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 74 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 14,020 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், சிவகாசி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 85 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
இதன்மூலம், மாவட்டத்தில் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,094 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,788 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 205 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 101 போ், பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.