போடி, செப். 25: போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி அரசுப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப்டம்பா் 16 ஆம் தேதி உலக ஓசோன் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘தி கிரீன் லைப் பவுண்டேசன்’ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இணைச் செயலாளா் ஆா்.மணிகண்டன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பள்ளியின் பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஓவிய ஆசிரியருமான முத்துராஜ், கணினி ஆசிரியா் பி.ராஜேஷ், ‘தி கிரீன் லைப் பவுண்டேசன்’ உறுப்பினா் செ.சுரேஷ் மற்றும் பசுமைப்படை மாணவா்கள் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா்.