தேனி: தேனி மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் மற்றும் மீனவா் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்தவா்கள், மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கண்மாய், குளம் மற்றும் பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பு மற்றும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள், அலங்கார மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள், மீன் விற்பனை செய்வோா் மற்றும் மீனவா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம். தகுதியுள்ளவா்கள் தங்களது ஆதாா் ஆட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் வைகை அணை, மீன் வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.