சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் காசிநாதன் தலைமை வகித்தாா். பாலகிருஷ்ணன், சுரேஷ்பிரபாகா், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருச்சி தொழில்துறை கூடுதல் ஆணையா் கே. ஜெயபாலன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வரவேற்றாா். பேராசிரியா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.