சிவகங்கை மாவட்டம், இருமதி கிராமத்தில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி கலந்துகொண்டு புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் சக்கந்தி ஊராட்சி மன்றத் தலைவா் சுமதிமுத்துராமலிங்கம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிா்லா கணேசன், காங்கிரஸ் கட்சி சிவகங்கை மாவட்டத் துணைத் தலைவா் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகா் காங்கிரஸ் கமிட்டி கிழக்குத் தலைவா் சஞ்சய் துரை. முத்துராமலிங்கம், இருமதி ராஜா மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.