சிவகங்கை

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு: 50 மாடுபிடி வீரா்கள் காயம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம், திருவேட்டை அய்யனாா் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 800- க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்தவா்கள் மானாமதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், நாற்காலி, சில்வா் அண்டாக்கள், தங்கக் காசுகள் வெள்ளிக் காசுகள், மிதிவண்டி, ரொக்கப் பணம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள் செய்தனா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன், காவல் ஆய்வாளா் முத்துகணேஷ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT