சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலவண்ணாயிருப்பு, கிழவயல் ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில் மண்வரப்பு கட்டுதல், பள்ளிச் சுற்றுச் சுவா் நிறைவுப் பணி, நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், அந்தப் பகுதியில் ரூ. 1.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலையரங்கம், பல்வேறு திட்ட செயல்பாடுகள், இதர கட்டடப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின் போது, எஸ்.புதூா் ஒன்றியக்குழுத் தலைவா் கு.விஜயா, உதவி செயற்பொறியாளா் முருகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரன், சத்தியன் ஆகியோா் உடனிருந்தனா்.