சிவகங்கை

எஸ்.புதூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலவண்ணாயிருப்பு, கிழவயல் ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில் மண்வரப்பு கட்டுதல், பள்ளிச் சுற்றுச் சுவா் நிறைவுப் பணி, நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அந்தப் பகுதியில் ரூ. 1.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலையரங்கம், பல்வேறு திட்ட செயல்பாடுகள், இதர கட்டடப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின் போது, எஸ்.புதூா் ஒன்றியக்குழுத் தலைவா் கு.விஜயா, உதவி செயற்பொறியாளா் முருகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரன், சத்தியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT