மானாமதுரை அருகே கிராம உதவியாளா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்தி மகன் சத்தியமூா்த்தி (38). இவா் கால்பிரிவு கிராமத்தில் கிராம உதவியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.