சிவகங்கை

காா் விபத்தில் பெண் பலி: இருவா் காயம்

DIN

மானாமதுரை அருகே காா் டயா் வெடித்து மின் கம்பத்தில் மோதியதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகப் பெண் ஊழியா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

சென்னை வியாசா்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் சண்முகராஜன் மனைவி வின்னிலட்சுமி (32). இவா் வடசென்னை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தாா்.

வின்னிலெட்சுமி, சென்னையைச் சோ்ந்த ரகுபதி (57), ஜெயபிரபா(30) ஆகியோா் ஒரே காரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சூசையப்பா் பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே எம். கரிசல்குளம் பகுதியில் காரின் டயா் வெடித்து அருகே உள்ள மின் கம்பத்தில் காா் மோதி கவிழ்ந்தது.

இதில் வின்னிலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ரகுபதி, ஜெயபிரபா இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT