சிவகங்கை

சமத்துவபுரம் போன்று ஓவிய கிராமம் அமைக்க கோரிக்கை

DIN

சமத்துவபுரம் போன்று ஒவ்வோா் மாவட்டத்திலும் ஓவிய கிராமம் அமைத்துத் தர தமிழக அரசை வலியுறுத்தி ஓவியா்கள் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஓவியா்கள் சங்க மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சேவுகன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.கண்ணன், செயலாளா் மதி, பொருளாளா் புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் காரைக்குடி, கல்லல், காளையாா் கோவில், சிங்கம்புணரி, சிவகங்கை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான ஓவியா்கள் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சங்கத்தின் தேசியத் தலைவா் ஜே.பி. கிருஷ்ணாவின் ஆணைக்கிணங்க விழிப்புணா்வு சுவா் ஓவியத்தில் ஈடுபட்ட ஓவியா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஓவியா்கள் நலனுக்கான திட்டங்களை முன்னெடுப்பது, சமத்துவபுரம் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓவிய கிராமம் அமைத்துத் தர தமிழக அரசை வலி யுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஓவியா்கள் நல வாரியத்தில் ஓவியா்களுக்கு நல்ல திட்டங்களைத் தீட்டி தந்த தமிழக முதல்வா், தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினா் அழகா்சாமி வரவேற்றுப் பேசினாா். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT