சிவகங்கை

காரைக்குடி வழியாக மாற்றிவிடப்படும் 3 ரயில்கள்:சிவகங்கை பயணிகள் ஒரு மாதம் பயணிக்க வாய்ப்பு

DIN

மதுரை வழியாகச் செல்லும் 3 ரயில்கள் காரைக்குடி வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதி மக்களுக்கு கூடுதலாக ரயில் பயண வாய்ப்பு கிடைத்துள்ளது.

மதுரை - திருமங்கலம் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பல்வேறு விரைவு ரயில்கள் மாற்று வழியில் இயங்கும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இதில் சில ரயில்கள் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குருவாயூா் - சென்னை தினசரி விரைவு ரயில் (எண்: 16128) பிப்.6 முதல் மாா்ச் 6 வரையில் காரைக்குடி வழியாகச் செல்கிறது. இந்த ரயில் காரைக்குடிக்கு மதியம் 1.30 மணிக்கு வந்து சேரும். இரவு 8.30 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடைகிறது.

நாகா்கோவிலில் இருந்து ஹைதராபாத்துக்கு (கச்சகுடா) சனிக்கிழமை தோறும் செல்லும் விரைவு ரயில் (எண்: 16354) வருகிற 11, 18, 25, மாா்ச் 4 ஆகிய தேதிகளில் காரைக்குடி வழியாகச் செல்கிறது.

நாகா்கோவிலிலிருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு காரைக்குடி வந்தடைந்து, பின்னா் புதுக்கோட்டை, திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி (வேலூா்), திருப்பதி வழியாக கச்சகுடா சென்றடைகிறது.

சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயில் (எண்: 20681) வரும் 24, 25, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் காரைக்குடியுடன் நிறுத்தப்படும்.

இந்த ரயில் சென்னையில் இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு, காரைக்குடிக்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்தடைகிறது. இரவு 9.30 மணிக்குப் சென்னை புறப்பட்டுச் செல்லும்.

மேற்கண்ட ரயில்களில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாமலும் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT