சிவகங்கை

பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை பெண் சிசுக் கொலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூா் காந்தி சிலையருகே அரசு மருத்துவமனை சாா்பில் தொடங்கிய இப்பேரணிக்கு அரசு மருத்துவா் ஆமீனாபானு தலைமை வகித்தாா். நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ் பிரபாகா் முன்னிலை வகித்தாா். முன்னதாக தலைமை செவிலியா் தனலெட்சுமி கல்லூரி மாணவிகளிடமும் பொதுமக்களிடமும் கருவில் குழந்தையின் பாலினம் அறிதல் தவறு என்றும் சிசுக் கொலை தண்டனைக்குரிய குற்றம் என்பது குறித்தும் விளக்கமளித்தாா். பின்னா் மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி காந்தி சிலையிலிருந்து மதுரை சாலை, பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக அரசு மருத்துவமனையை அடைந்தனா். இப்பேரணியில் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT