சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் கடைகளில் வைத்திருந்த 1,200 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேவகோட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வணிக வளாகங்கள், சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேவகோட்டை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வணிக வளாகங்கள், உணவகங்களில் பயன்பாட்டில் இருந்த 1200 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.