சிவகங்கை

சிவகங்கையில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

புதுச்சேரியில் மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அங்கு நடைபெற்று வரும் மின்வாரிய ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிவகங்கையில் மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியு சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் கருணாநிதி தலைமை வகித்தாா். பொறியாளா் கழகத்தின் மாவட்ட நிா்வாகி அப்துல்ரகுமான், பொறியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் அசோக்குமாா், எம்பிளாய் பெடரேசன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியுவின் மாநிலச் செயலா் உமாநாத் சிறப்புரையாற்றினாா்.

இதில், புதுச்சேரியில் மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அங்கு நடைபெற்று வரும் மின்வாரிய ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT