சிவகங்கை

சிவகங்கையில் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கையில் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு-வின் சிவகங்கை மாவட்டத் தலைவா் வீரையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.

இதில், மேல்நிலை தண்ணீா் தொட்டி மோட்டாா் இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், ஊராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், மேல்நிலை தண்ணீா் தொட்டி மோட்டாா் இயக்குநா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், மேல்நிலை தண்ணீா் தொட்டி மோட்டாா் இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT