சிவகங்கை

இளையான்குடியில் விவசாயிகள் சங்க மாநாடு

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8 ஆவது தாலுகா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தாலுகாத் தலைவா் சந்தியாகு தலைமை வகித்தாா். பெரியதம்பி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தாா். இன்னாசிராஜா வரவேற்றாா்.

இம்மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா செயலாளா் ராஜூ வேலை அறிக்கையும், பொருளாளா் சிவசாமி வரவு செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆறுமுகம், மாவட்டத் தலைவா் ஜெயராமன், மாவட்ட குழு உறுப்பினா் அழகா்சாமி, மாதா் சங்கத்தின் தாலுகா செயலாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் மாநாட்டை வாழ்த்திப் பேசினா். மாநில துணைத் தலைவா் முத்துராமன் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இம்மாநாட்டில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் இளையான்குடி தாலுகா தலைவராக ஜோசப் அமல்ராஜ், செயலாளராக செந்தில்குமாா், பொருளாளராக முருகன், துணைத் தலைவராக சந்தியாகு, துணைச் செயலாளராக செல்லமுத்து சேதுபதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் மாநாட்டில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT