சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை நாய்கள் துரத்திக் கடித்ததில் புள்ளிமான் இறந்தது.
திருப்பத்தூா் சங்கிலியான் கோயில் பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்து திருப்பத்தூா் வனத்துறைக்கு கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் வனத்துறை அலுவலா் திருப்பதி ராஜன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த புள்ளிமானை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் திருப்பத்தூா் வனச்சரக அலுவலக வனப்பகுதியில் மானின் உடலை புதைத்தனா்.