சிவகங்கை

மெக்கானிக் கொலையில் மனைவி, மைத்துனா் கைது

DIN

மானாமதுரையில் மெக்கானிக்கை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தொடா்பாக அவரது மனைவி, மைத்துனா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை ரயில்வேகாலனி ஜீவா நகரைச் சோ்ந்த மெக்கானிக் சுரேஷ் (40). இவருக்கு மலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மலைச்செல்வியின் சகோதரரான சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன், சித்தி மகன் உடைகுளம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரும் சுரேஷை வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் கணேசன், காா்த்திக் மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த சுரேஷ் மனைவி மலைச்செல்வி ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT