சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 6) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இடையமேலூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே, தமராக்கி, குமாரப்பட்டி, காராம்போடை, கண்டாங்கிப்பட்டி, மீனாட்சிபுரம், முடிகண்டம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.