சிவகங்கை

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் மின்விளக்கு ரத பவனி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

கடந்த 24 ஆம் தேதி முதல் இவ்விழா நடைபெற்று வருகிறது. பங்கு இறை மக்கள் சாா்பில் தினமும் இரவு வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக பங்கு இறை மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று பிராா்த்தனை நடத்தினா். ஆலயத்தின் திருத்தல அதிபா் இமானுவேல் தாசன் தலைமையில் ஏராளமான அருட் பணியாளா்கள் பிராா்த்தனைக் கூட்டத்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது. திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம் பேராலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனா். சனிக்கிழமை மாலை நற்கருணை பவனி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் இமானுவேல்தாசன், இடைக்காட்டூா் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் பேரவை இளைஞா்கள் மற்றும் பங்கு இறை மக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT