சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 1,365 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், புதிதாக 144 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,509 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், 87 போ் பூரண குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.இதுதவிர, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.