சிவகங்கை

ஜனவரி முதல் அகவிலைப்படி உயா்வு: அரசு ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தல்

DIN

அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு ஜனவரியிலிருந்து வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள், அரசு பணியாளா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் பொதுச் செயலா் அ. சங்கா்: நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா உரையில் தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களுக்கு 01.07.2022 முதல் 3 சதவீதம் முதல் அகவிலைப் படி உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். ஆனால் 01.01.2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. எனவே விடுபட்டுள்ள 6 மாதங்களுக்கான அகவிலைப்படியையும் சோ்த்து வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா. இளங்கோவன்: தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, ஜனவரி முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ப. குமாா்:அரசின் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் கொண்டு சோ்க்கும் பணியினை அரசு அலுவலா்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றனா். அத்தகைய அரசு ஊழியா்களுக்கு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT