சிவகங்கையில் முன்னாள் படை வீரா்கள் குறை தீா்க்கும் முகாம் புதன்கிழமை (ஆக. 17) நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாலை 3. 30 மணியளவில் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னாள் படைவீரா்கள், அவா்கள் குடும்பத்தைச் சோ்ந்தோா் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுவை வழங்கித் தீா்வு பெறலாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.