சிவகங்கை

திருப்பத்தூா் அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கியிலிருந்து திருப்பத்தூா் வழியாக மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து, கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநா் திடீரென பிரேக் அடித்து நிறுத்தியுள்ளாா்.

இந்நிலையில் அவ்வழியாக புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூா் வழியாக மதுரைக்கு சென்ற தனியாா் பேருந்தை ஓட்டுநா் நிறுத்த முற்பட்ட போது நிலைதடுமாறி, வயலுக்குள் கவிழ்ந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், முதியவா்கள், என 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த பெண் ஒருவருக்கு வலது கையில் இருந்த விரல் துண்டிக்கப்பட்டது. காயமடைந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் படுகாயமடைந்த அழகா், ராஜசேகரன் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக மதுரை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு யாா் முதலில் செல்வது என்ற போட்டியால் இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற விபத்துகள் தொடா்ந்து நடைபெறாமல் இருக்க போக்குவரத்து துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT