சிவகங்கையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிவகங்கை கலைமகள் ஓவியப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு ஓவியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ஓவியக் கண்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து ஓவியக் கண்காட்சியினை தொடக்கி வைத்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், சிவகங்கை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இக்கண்காட்சி ஆகஸ்ட் மாதம் நிறைவு வரை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளதாக அருங்காட்சியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிகழ்ச்சியில், சிவகங்கை நகா் மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த், சிவகங்கை நகராட்சி ஆணையா் வி.பாஸ்கரன், நகா்மன்ற துணைத் தலைவா் காா்கண்ணன், அருங்காட்சியக காப்பாட்சியா் பக்கிரிசாமி, கலைமகள் ஓவிய பயிற்சிமைய நிறுவனா் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.