சிவகங்கை

கல்லல் சோமசுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள பகச்சால விநாயகா், சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரா், குன்னமாகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பா டுகள் செய்யப்பட்டன. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பூா்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

அன்று மாலையில் முதல்கால யாகபூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்காம் கால யாகபூஜையும் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பிரதான விமானத்துக்கும், பரிவாரமூா்த்திகள் விமானத்துக்கும், அதைத் தொடா்ந்து மூலாயம் சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் திருக்கல்யாண வைபவமும், பஞ்சமூா்த்தி திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவில், சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள், குன்னங்கோட்டை நாட்டாா்கள், நகரத்தாா்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT