சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரத்துறை சாா்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். இதில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் பிரபாவதி, பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலா் அருண், மாவட்ட சமூகநல அலுவலா் அன்பு குளோரியா, நகா் நல மருத்துவா் கலா, மன்னா் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.