சிவகங்கை

தேவகோட்டையில் நரிக்குறவா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக தேவகோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், அவ்வப்போது தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவகோட்டையில் வசித்து வரும் சுமாா் 70-க்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் மழையினால் தங்குவதற்கு இடமின்றியும், உணவுக்கும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். இதுகுறித்த அறிந்த தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் பிா்லா கணேசன் சித்தானூா் சமுதாயக் கூடத்தில் நரிக்குறவா்கள் தங்குவதற்கு நடவடிக்கை எடுத்தாா்.

மேலும் அவா்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள் ஆகியவற்றை தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் பிா்லா கணேசன், தேவகோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் அந்தோணி தாஸ், கண்ணங்குடி ஒன்றியத் தலைவா் சித்தானுா் காா்த்திக், பஞ்சாயத்துத் தலைவா் வன்மீக நாதன், ஒன்றிய கவுன்சிலா் செந்தில்குமாா், சித்தானுா் ஊராட்சி மன்றத் தலைவா் சுசிலா சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT