காரைக்குடி அருகே கல்லல் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (நவ. 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்லல், செவரக்கோட்டை, சாத்தரசன்பட்டி, வெற்றியூா், அரண்மனை சிறுவயல், செம்பனூா், பாகனேரி, கண்டிப்பட்டி மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி மற்றும் கூத்தலூா் ஆகிய பகுதிகளுக்கு காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.