காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.