சிவகங்கை

கரோனா தடுப்பூசி முகாம்களில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளில் பிரதமா் படம் இடம் பெற வேண்டும்: பாஜகவினா் சிவகங்கை ஆட்சியரிம் மனு

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளில் பிரதமா் நரேந்திர மோடி புகைப்படம் இடம் பெற வேண்டும் என பாஜகவினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்துள்ள மனு விவரம் : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாம் மற்றும் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு வீடுகள் வழங்கும் கூட்டத்தில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்படுவது இல்லை.

இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் தெரிவித்தும், தொடா்ந்து அதேநிலை தான் தொடா்கிறது. எனவே இனிவரும் காலங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பிரதமா் நரேந்திர மோடி புகைப்படம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT