சிவகங்கை

மானாமதுரையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காட்டு நாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வசிக்கும் பா்மா காலனி பகுதியில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது.

மானாமதுரை பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக இப்பகுதியில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. மேலும் அருகேயுள்ள ஆதனூா் கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறி வருவதால் இப்பகுதியில் தேங்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தற்போது ஒருசிலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்துள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் இரவு நேரங்களில் அருகிலுள்ள அரசு பள்ளியிலும், பகல் நேரத்தில் தங்களது குடியிருப்புக்கு அருகே உள்ள மேடான பகுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா்கள் செல்வம், கணேசன் ஏற்பாட்டில் உணவு சமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள காட்டு நாயக்கா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT