சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பழங்குடியினா் நலத் திட்டத்தின் கீழ், உயா் கல்வி பயில விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் கல்வி பயின்றிருக்க வேண்டும். தொடா்ந்து, உயா்கல்வியான எம்.ஃபில்., பிஹெச்.டி. பயில விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.